ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல்...!! இசட் பிளஸ் பாதுகாப்பு விவகாரத்தில், பீதி கிளப்பிய வைகோ...!!!
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டதில் அதிமுக பாஜக ஆகிய கட்சிகளின் சதி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் முக்கிய தலைவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது , இந்நிலையில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தன , துணை முதலமைச்சர் ஓ .பன்னீர் செல்வத்திற்கு Y பிளஸ் பாதுகாப்பும், அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு Zபிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது .
அதாவது மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர் நாட்டில் இப்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது . இதில் கடந்த 6ஆம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவரது பாதுகாப்பை விலக்கிக் கொள்ளப்பட்டது . அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு அவசியம் இல்லை என தெரியவந்ததையடுத்து அவருடைய பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது, மேலும் அதற்கு இணையாக பாதுகாப்பு தமிழக போலீஸ் சார்பில் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது . திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, தமிழகத்தில் பெரியார் அண்ணா ஆகியோரின் லட்சங்களுக்கு எதிராகவும் திராவிடத்துக்கு எதிராகவும் திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துக்களை திமுக தலைவர் ஸ்டாலினே சரியாக எதிர்கொண்டு வருகிறார் . இதனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன . பெரியார் சிலை உடைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகள் நடந்து வருகிறது, திராவிட இயக்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலில் திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு தொடர்வதே நியாயம் , ஆனால் இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது . மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பை சதி செய்து நீக்கியுள்ளனர் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார் .