Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா மரணத்திலும் திடுக் குற்றசாட்டு... அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் மேத்யூ..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் திடுக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

matthew samuel arrest to kodanadu issue in chennai
Author
Tamil Nadu, First Published Jan 23, 2019, 3:27 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் திடுக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 matthew samuel arrest to kodanadu issue in chennai

கோடநாடு எஸ்டேட் கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேல் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘’கொடநாடு கொலைகள் தொடர்பாக அரசின் புலனாய்வு அமைப்புகள் தான் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். பத்திரிக்கையாளர் என்கிற முறையில் கொடநாடு விவகார தகவல்களை திரட்டி இருக்கிறேன்.matthew samuel arrest to kodanadu issue in chennai

எனக்கு பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. நான் சென்னை வருவதற்கு அஞ்சவில்லை. ஆவணங்களை திருடிச் சென்றதற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி இன்னும் விளக்கவில்லை. கொலை,  கொள்ளைக்கு பின்னால் இருப்பவர்களை பழனிசாமி தாமாக முன் வந்து கூறவேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவரவேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடமும் பேட்டி எடுத்துள்ளேன். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். என்னுடன் வரத் தயாரக இருந்த மருத்துவர்கள் வரத் தயங்குகிறார்கள்.matthew samuel arrest to kodanadu issue in chennai

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது. சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் நான் ஆதரவிக்கவில்லை. கொடநாடு கொள்ளையைத் தொடர்ந்து 5 கொலைகள் நடந்துள்ளன. கேரளாவில் இருக்கும் சயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்துக் கொள்ளலாம். நான் சொல்லிக்கொடுத்து சயன், மனோஜ் பேசவில்லை. டிசம்பர் 19ம் தேதியே கோடநாடு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது’’ என அவர் தெரிவித்தார்.   
 

Follow Us:
Download App:
  • android
  • ios