கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் மே 7 முதல் 5 நாட்களுக்கு ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக விமானங்களை இயக்கின. இந்த விமானங்கள் மூலம் 6,037 இந்தியர்கள் தாய் நாடு திரும்பினர். இதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியா திரும்ப அழைத்து வர 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், உடனடியாகத் தமிழகம் திரும்ப வசதியாக தமிழ்நாட்டிற்கான விமானச் சேவையை விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் மே 7 முதல் 5 நாட்களுக்கு ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக விமானங்களை இயக்கின. இந்த விமானங்கள் மூலம் 6,037 இந்தியர்கள் தாய் நாடு திரும்பினர். இதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியா திரும்ப அழைத்து வர 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

