kpmunusamy against sasikala family
தமிழக அமைச்சர்களை வேறு யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான சமரச பேச்சுவாரத்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதன்பின்னர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் கருத்து வேறுபாடு உள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் கோடிக் கணக்கான தமிழ் நெஞ்சங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா இயற்கையாக மரணிக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆறாத்துயரத்துடன் மக்கள் உள்ளனர்."

