Asianet News TamilAsianet News Tamil

மூழ்கும் மலையாள தேசம்… இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்யுங்க… உருகி வேண்டும் கேரள மக்கள் !!

மூழ்கும் மலையாள தேசம்… இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்யுங்க… உருகி வேண்டும் கேரள மக்கள் !!

Kerala people ask to pray for them to rescue rain and flood
Author
Chennai, First Published Aug 11, 2018, 3:25 PM IST

கேரளாவில் கடந்த சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, தற்போது மீண்டும்  உக்கிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய  4 மாவட்டங்களில்  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது.

Kerala people ask to pray for them to rescue rain and flood

இதனால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

Kerala people ask to pray for them to rescue rain and flood

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன  வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த தொடர்மழையல் மூணார் பகுதி மதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறை அடுத்த பள்ளிவாசல் என்ற மலைப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி  நிலச்சரிவில் சிக்கி கொண்டது. அங்கு தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 61 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

Kerala people ask to pray for them to rescue rain and flood

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

கேரளாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் நாளை வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னதாலா மற்றும் அமைச்சர்கள்  உள்ளிடோர்  ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டனர்அவர் பார்வையிட்டார்.  மேலும் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  வாகனங்களில் சென்று பார்வையிட்டனர்.

Kerala people ask to pray for them to rescue rain and flood

பல இடங்களில் கடந்த செல்ல முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து மழை மற்றும் மண் சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும் வீடு நிலங்களை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் உடனடி நிவாரணமாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

பொதுவாக மலையாள மக்கள் மழையைக் கொண்டாடித் தீர்ப்பார்கள். கடந்த மாதம் பெய்த மழையில் கூட இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் நனைந்தபடி மழையை அனுபவித்தனர்.

Kerala people ask to pray for them to rescue rain and flood

ஆனால் தற்போது கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லா அளவுக்கு மழை பெய்து வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையடுத்து இயற்கை பேரிடரில் இருந்து கேரளாவைக் காக்க பிரார்த்தனை செய்ய வேண்டும் என அம்மாநில மக்கள் உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் #savekerala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.

நாமும் கேரளாவுக்காக விரார்த்தனை செய்வோம். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் நீங்கள் அனுப்பி வைக்கும், ஒவ்வொரு ரூபாயும், ஏதாவது ஒரு வகையில், நமது கேரள சகோதரர்களை பாதுகாக்க உதவும். இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

*Chief Minister's Relief Fund..*

Account No:67319948232

State Bank of India, City Branch, Trivandrum

IFSC: SBIN 0070028..

என்ற வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி  வைக்க  வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios