பேருந்து பயணிகளுக்கு பயங்கர அதிர்ச்சி...!! கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தி அரசு அறிவிப்பு...!!
கோட்டங்களில் இருந்தும் சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து தற்போது பேருந்து கட்டணம் 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது . அதாவது 191 ரூபாய் என இருந்த பேருந்து கட்டணம் 196 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதால் அம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது . மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பால் ஏற்கனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது . இதனால் மத்திய மாநில அரசுகளின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் கர்நாடகா அரசு பேருந்து கட்டணத்தை 12% உயர்த்தி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவை பொருத்தவரையில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் பேருந்து காட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் கர்நாடகா பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது . கர்நாடகாவில் 4 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது , கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் , வடக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் , அதேபோல் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் , பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் என நான்கு மண்டலங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . தற்போது இங்கு பேருந்து கட்டணம் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது . தமிழகத்தை பொறுத்த வரை நாள்தோறும் சுமார் 400 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சேலம் மாநகரத்திலிருந்து நாள்தோறும் 90 பேருந்துகள் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது . அதேபோல் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் இருந்தும் சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து தற்போது பேருந்து கட்டணம் 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது . அதாவது 191 ரூபாய் என இருந்த பேருந்து கட்டணம் 196 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது . அதேபோல் நான்ஸ்டாப் ஏசி பேருந்துகளுக்கு 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் இந்த பேருந்து கட்டணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது அதேபோல் தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது .