கோட்டைவிட்ட கமல்..! கடைசியில இப்படி பண்ணிட்டாரே...
நடிகர் கமல் உத்தண்டியில் விதியை மீறி வீடு கட்டியதாக,சிஎம்டிஏ அவருக்கு நோடீஸ் அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது
நடிகர் கமல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 நடிகர் நடிகைகள் சென்னை உத்தண்டி கடற்கரையில் சொகுசு பங்களா கட்டி உள்ளனர்
இந்த இடங்களில், தேவையான அனுமதி பெறாமல் விதியை மீறி சொகுசு பங்களா கட்டி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
நடிகர் கமல் ஒரு சினிமா நடிகராக இருக்கும் வரை இது போன்ற எந்த பிரச்னையும் எழாமல் இருந்தது.தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்வாதியாக வலம் வருகிறார் கமல்..இந்நிலையில் தான் விதியை மீறி கட்டப்பட்ட சொகுசா பங்களா பற்றி செய்தி வெளியாகி உள்ளது.உத்தரவும் பிறபிக்கப்பட்டு உள்ளது