கொரோனா வைரசுக்கு இந்தியர்கள் அஞ்சத் தேவையில்லை..!! பெண் விஞ்ஞானி சொன்ன பாசிடிவ் தகவல்...!!
தற்போதைக்கு தடுப்பூசி இல்லை ஆனால் அடுத்த ஆண்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் . பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் தாக்கியதாக சந்தேகம் இருந்தால் உடனே சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் .
கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என இந்திய பெண் விஞ்ஞானி கருத்து கூறியுள்ளார் , கொரோனா வைரஸ் சீனாவை கடந்து சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது . இந்நிலையில் இந்தியாவை கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியுள்ளது . இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது . கொரோனா வைரஸ் குறித்த பீதி அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி பேராசிரியை, மற்றும் இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் விஞ்ஞானியுமான ககன்தீப் காங்,
கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை , இந்த நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்தில் நான்கு பேர் தாங்களாகவே குணமடைவார்கள் அதே போல் காய்ச்சல் இருமலுக்கு பாராசிட்டாமால் தவிர வேறு மருந்துகள் தேவைப்படாது . ஐந்தாவது நபர் வேண்டுமானால் மருத்துவரை பார்க்க வேண்டும் , அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் . மூச்சுத்திணறல் இருந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் . அதேபோல் இந்த காய்ச்சல் குழந்தைகளை தீவிரமாக பாதிப்பதில்லை . முதியவர்களைதான் பெரிதும் பாதிக்கிறது .
அதேபோல் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் உள்ளவர்களை இது பெரிதும் தாக்குகிறது . தற்போதைக்கு தடுப்பூசி இல்லை ஆனால் அடுத்த ஆண்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் . பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் தாக்கியதாக சந்தேகம் இருந்தால் உடனே சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் . அதேபோல் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டும் . பொதுமக்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் , முக உறுப்புகளை தொடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.