Asianet News TamilAsianet News Tamil

சீனாவைப்போல தயாராகுமா இந்தியா...?? 30 கோடி மக்கள் பாதிக்க வாய்ப்பு என அதிர்ச்சி...!!

இந்தியாவில் 30 கோடி பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளது.  அதாவது  ஐந்தில் ஒருவர் அல்லது பத்தில் ஒருவர் தீவிர பாதிப்புக்குள்ளாகலாம்  அப்படி கணக்கிட்டால் கூட 40 முதல் 50 லட்சம் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும் 

india shall ready as like china for prevention and protect people's 30 crore people may be affect virus
Author
Chennai, First Published Mar 21, 2020, 3:33 PM IST

கொரோனாவால் இந்தியாவில் 30 கோடி  பேர் பாதிக்க வாய்ப்புள்ளது என நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர்,  மருத்துவர் ரமணன் லட்சுமி நாராயணன் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார் .   உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கத் தொடங்கியுள்ளது.  இதுவரை 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதில் 196 பேர் இந்தியர்கள் 32 பேர் வெளிநாட்டவர்கள் ,  மொத்தத்தில்  23 பேர் இந்த வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர் என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .  மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ,  இந்தியாவில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது.  ஆனால் உண்மை நிலவரம் என்ன.?  இந்த வைரஸ் இந்தியாவில் தடுக்கப்படுமா.?  உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்  ரமணன் கூறியதாவது :-  

india shall ready as like china for prevention and protect people's 30 crore people may be affect virus

உலகில் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனாவால் பாதித்தவர்கள்  இந்தியாவில் குறைவு பேசப்படுகிறது ஆனால் நிலைமை அப்படி இல்லை, கொரோனா  நோய்த் தொற்றுடன் இருப்பவர்களை அதிகம் பரிசோதித்தால்தான் நிலைமை தெரியவரும் .  கொரோனா தீவிரமாக தாக்குவதில் இருந்து  சில வாரங்கள் நாம் பின் தங்கி இருக்கிறோம் அவ்வளவுதான் .  ஆனால் இது ஒரு சுனாமி போல அது நம்மை தாக்கலாம் .  ஸ்பெயினில் அப்படித்தான் நடந்துள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா குறித்து அதிக எண்ணிக்கையில்  பரிசோதனை நடத்துவது ஒரு பிரச்சினையாக உள்ளது .  ஆனால் சில வாரங்களில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகலாம்,   அது சில நிமிடங்களில் பல ஆயிரங்களை தாண்டலாம்,  நாம் நிச்சயம் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும் .  இந்தியாவும் சீனாவை போல அதிக மக்கள் தொகை கொண்ட  நாடு தான் தோற்று உருவானவர்கள் மூலம் கூடுதலாக இரண்டு பேருக்கு தொற்று உருவாவதை நினைவிற் கொள்ள வேண்டும்.

 india shall ready as like china for prevention and protect people's 30 crore people may be affect virus

இந்தியாவில் எவ்வளவு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று அறுதியிட்டு கூறமுடியாது .  ஆனால் கணித மாதிரிகளை பயன்படுத்தி அதை ஒரளவு கணிக்க முடியும் .  அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.   இந்த சதவீதத்தில் குறைந்தபட்ச அளவு 20% என்று வைத்தால் கூட இந்தியாவில் 30 கோடி பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளது.  அதாவது  ஐந்தில் ஒருவர் அல்லது பத்தில் ஒருவர் தீவிர பாதிப்புக்குள்ளாகலாம்  அப்படி கணக்கிட்டால் கூட 40 முதல் 50 லட்சம் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும் .  இந்திய சுகாதாரத்துறை அதை சமாளிக்குமா.?  ஆனால்  இந்தியாவில் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அவசர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன.  

india shall ready as like china for prevention and protect people's 30 crore people may be affect virus

இவ்வளவு பெரிய  நாட்டிற்கு இது மிகக் குறைவான எண்ணிக்கை என்பதுதான் கவலை அளிக்கிறது .  எனவே தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கவேண்டும் என்று வென்டிலேட்டர்களை  கொள்முதல் செய்யவேண்டும் அதற்கான கால அவகாசம் நமக்கு இல்லை வெரும் மூன்று வாரங்கள் தான் உள்ளன .  இந்தியாவும் சீனாவை போல நடவடிக்கை எடுத்தால் தான் தப்பிக்க முடியும் .  ஒரு கடற்கரையிலிருந்து சுனாமி வரும்போது அதை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால் அதில் சிக்கி சாக வேண்டியதுதான்.  அதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி தயாராக வேண்டுமோ அப்படி தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios