Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவுக்கு போகட்டும். திமுக அவர் சொத்து அல்ல.. திமுக வை காப்பாற்றிய அன்பழகன்.!!

கலைஞர் கருணாநிதி எப்போதெல்லாம் கலங்கினாரோ..! அப்போதெல்லாம் அவரின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னவர் இனமான பேராசிரியர் அன்பழகன். அண்ணாவின் தம்பியாய்.!கலைஞரின் அண்ணனாய் திமுக கழகத்தை கட்டிக்காத்தவர்களில் இவரும் ஒருவர். கருணாநிதி பொதுவெளியில்  வாஞ்சையோடு பேராசிரியர் என்று அழைத்தாலும், அறைக்குள் அண்ணன் என்று  தான் கருணாநிதி அழைப்பார்.திராவிட இயக்கத்தின் சகாப்தங்களில் இவரும், ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.
 

If you want mercy, go to AIADMK. DMK is not the property
Author
Tamil Nadu, First Published Mar 7, 2020, 9:02 AM IST

T.Balamurukan

கலைஞர் கருணாநிதி எப்போதெல்லாம் கலங்கினாரோ..! அப்போதெல்லாம் அவரின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னவர் இனமான பேராசிரியர் அன்பழகன். அண்ணாவின் தம்பியாய்.!கலைஞரின் அண்ணனாய் திமுக கழகத்தை கட்டிக்காத்தவர்களில் இவரும் ஒருவர். கருணாநிதி பொதுவெளியில்  வாஞ்சையோடு பேராசிரியர் என்று அழைத்தாலும், அறைக்குள் அண்ணன் என்று  தான் கருணாநிதி அழைப்பார்.திராவிட இயக்கத்தின் சகாப்தங்களில் இவரும், ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

If you want mercy, go to AIADMK. DMK is not the property
அன்பழகன் கோபம்:
1979ம் ஆண்டு திமுக, அதிமுக இணைப்பு குறித்து கருணாநிதியின் நெருங்கிய நண்பர் பிஜூபட்நாயக் ஒரிசாவில் இருந்து சென்னை வருகிறார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. அதன் பிறகு கட்சி தலைவர், சின்னம், கொடி இன்னும் பிற அம்சங்களெல்லாம் விவாதிக்கப்பட்டு கலைஞர் எம்ஜிஆர் சந்திப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொதுச்செயலளார் அன்பழகன் பெரும்பாலும் கோபப்படாத அன்பழகன்..., கொதித்துப்போய் சொன்னது... "கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவுக்கு போகட்டும். திமுக அவர் சொத்து அல்ல; அதிர்ந்து போன கருணாநிதி அந்த நேரத்தில் திமுக இணைப்பு திட்டத்தை கைவிட்டார்.

If you want mercy, go to AIADMK. DMK is not the property
திமுக கழகத்தைக் கலைஞர்; கட்டிக்காத்தார் என்றால் இனமானப் பேராசிரியர் அன்பழகன் பெரும் பழியில் இருந்து, மாபெரும் வரலாற்று பிழையில் இருந்து கழகத்தைக் காத்தவர். வாழ்க திராவிடம்; வாழ்க கிளர்ச்சி தொண்டா துவேசமா? ,வகுப்புரிமைப் போராட்டம் போன்ற பல நூல்களை அதாவது திராவிடச் சித்தாந்தங்களின் விரிவான, அறிமுக நூல்களை எழுதியவர். மடைதிறந்த வெள்ளமெனப் பேசுவார்.திருக்குறளை மேற்கோள்காட்டி பேசுவார். எல்லாவற்றிற்கும் மேலாக கருணாநிதியின் உற்ற நண்பனாக, உரிய ஆலோசகராக இருந்தவர் அன்பழகன்.

If you want mercy, go to AIADMK. DMK is not the property
இராமையா என்னும் தனது பெற்றோர் இட்ட பெயரை மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அன்பழகன் என்று மாற்றிக்கொண்டவர். பெரியாரின் வழிகாட்டடியாய் ஏற்று அண்ணாவின் கொள்கைகளை வரித்து கருணாநிதிக்கு எப்போதும் துணைநின்று திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பியவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவு ஆகஸ்ட் 7.அன்பழகனின் மறைவு மார்ச் 7. இதிலும் இணைபிரியாமல் அண்ணாவின் தம்பியும் கலைஞரின் அண்ணனும் ஓய்வுவெடுக்கச் சென்றிருக்கிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios