Asianet News TamilAsianet News Tamil

ஐ.பி.எஸ் மகளுக்கு பெருமையுடன் சல்யூட் அடித்த டிசிபி…. நேருக்கு நேர் சந்தித்த போது நெகிழ்ச்சி ….

தெலங்கானா மாநிலத்தில்  மாவட்ட எஸ்.பி.யான தனது மகளுக்கு டிசிபியான அப்பா சல்யூட் அடித்து மரியாதை செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மகளுக்கு சல்யூட் அடித்தது தனக்கு பெருமையாக உள்ளதாக அந்த டிசிபி தெரிவித்தார்.

Hydrabath DCP salute  his IPS daughter
Author
Hyderabad, First Published Sep 4, 2018, 6:44 AM IST

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தொடக்க விழா மற்றும் தனி தெலுங்கானா மாநிலம் உதயமான விழா ஆகிய இருபெரும் விழாவை சிறப்பிக்கும் விதமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று  பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

Hydrabath DCP salute  his IPS daughter

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில்  காவல் துணை ஆணையராக இருப்பவர்  ஏ.ஆர்.உமாமகேஸ்வர சர்மா. இவர் அடுத்த  ஆண்டு ஓய்வு பெறவுள்ளார். இவரது மகள், சிந்து சர்மா ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று இதே  மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் நேற்று நடைபெற்ற தெலுங்கானா ராஸ்டிரிய சமிதியின் மாபெரும் பேரணியில் பணி நிமித்தமான முதன் முறையாக சந்திக்க நேர்ந்தது. அப்போது, தந்தைமகளுக்கு சல்யூட் அடித்தார்.

Hydrabath DCP salute  his IPS daughter

இதைத் தாம் பெருமையாகக் கருதுவதாகவும், வீட்டில்தான் தாங்கள் வழக்கமான அப்பா-மகளே தவிர, பணியில் தன் மகள் தமக்கு உயரதிகாரிதான் என்பதால் உரிய மரியாதை அளித்ததாக உமாமகேஸ்வர சர்மா தெரிவித்தார்.

Hydrabath DCP salute  his IPS daughter

 

அதே நேரத்தில் இந்த நிகழ்வு  தமக்கு பெருமையான தருணம் என அவரது மகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில கால்துறையினர் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரு மதிப்புடன் பேசப்பட்டு வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios