பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுளளது.

கல்வீச்சுமற்றும்பொதுசொத்துக்களைசேதப்படுத்தியவழக்கில்பாலகிருஷ்ணாரெட்டிக்குஎம்.பி,க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றம் 3 ஆண்டுகள்சிறைத் தண்டனைவழங்கி தீர்ப்பளித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து அவரதுஎம்.எல்.பதவியும்அமைச்சர்பதவியும்பறிபோனது. இந்நிலையில் தனக்குசிறப்புநீதிமன்றம்அளித்ததண்டனையைநிறுத்திவைக்கவேண்டும்என்றுபாலகிருஷ்ணரெட்டி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்துள்ளார். இந்தமனு மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில். ஓசூர்தொகுதிகாலியாகஉள்ளதாகதமிழகஅரசின்அதிகாரபூர்வஇணையதளத்தில்செய்தி வெளியிடப்பட்டுள்ளதால்இந்ததொகுதிகாலிஎன்பதுஉறுதியாகியுள்ளது.

ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகள் என 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது ஓசூர் தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.