அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. முன்னதாக அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த இரு வழக்குகளும் இன்று விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மொத்த இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: ஏட்டிக்கு போட்டி... ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ் அறிவிப்பு!!
ஓபிஎஸ் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும், கட்சி விதிப்படி தலைமை நிலையச் செயலாளர்தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பில் நான் இருக்கிறேன், ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் மனு தாக்கல் செய்ததே தவறு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் கட்சி அலுவலகத்துக்கு உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லாத போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு மனுவில் ஓபிஎஸ் கோரியுள்ளார். அதிமுக அலுவலகம் தனி நபர் சொத்து அல்ல என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் சென்றேன்; அங்கே இபிஎஸ் ஆதரவாளர்கள் தடுத்தனர் கட்சி அலுவலகத்தில் நுழைய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் நீதிபதி சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பதிலளித்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
