free wi-fi in chennai merina and 5 other place in tamilnadu

சென்னை மெரீனா கடற்கரை, திருச்சி,மதுரை,சேலம் மற்றும் கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இலவச ‘வை-பை’ வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழன்சாமி தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தார்.

முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வை-பை மண்டலம்’ ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 இடங்களில் அம்மா ‘வை-பை’ மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.