கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேச மேத்யூ சாமுவேல் உட்பட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கோடநாடுஎஸ்டேட்டில்நடந்தகொலைமற்றும்கொள்ளையில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்குதொடர்பிருப்பதாககடந்தசிலநாட்களுக்குமுன்னர்ஆவணப்படவீடியோவைடெஹல்காபத்திரிகையின்முன்னாள்ஆசிரியர்மேத்யூசாமுவேல்வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்சென்னைவந்தமேத்யூசாமுவேல் , எனக்குஎந்தஅரசியல்பின்னணியும்இல்லைஎன்றும், கோடநாடுவிவகாரத்தை சட்டரீதியாகசந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் பேசிய மேத்யூ சாமுவேல் தனக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு தரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமின்றி பேசவும், ஆவணங்களை வெளியிடவும் மேத்யூ சாமுவேல் உட்பட 7 பேருக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்..
மேலும் முதலமைச்சரின் மனுவுக்கு 30-ம் தேதிக்குள் பதிலளிக்க மேத்யூ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
