ஆளுநர் உரையைப் புறக்கணித்த திமுக !! வெளிநடப்பு செய்த, டி.டி.வி.தினகரன், தமிமுன் அன்சாரி !!
தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநரின் உரையை ஏற்க மறுத்த திமுக, டி.டி.வி.தினகரன் மற்றும் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமழக சட்டப் பேரைவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் தொடங்கினார். அப்போது எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து குடியுரிமைச் சட்டம் உள்ளட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அனுமதிக்க வேண்டும் தெரிவித்தார்.
ஆனால் ஆளுநர் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தருகிறேன் அதற்கு மன்பு எனது உரையை முடித்துக் கொள்கிறேன் என கேட்டார். அதற்கு மறுத்த திமுகவினர் சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் திமுகவினர் உடனடியாக சட்டப் பேரவையை விட்டு வெளியேறினர். இதே போன்னு ஆளுநடர் உரையைப் புறக்கத்து அமமுக பொதுக் செயலாளர் டி.டி.வி.தினகரன் , தமிமீன் அன்சாரி ஆகியோரும் வெளியேறினர். தொடர்ந்த சட்டப் பேரவையில் ஆளுநர் உரையாற்றி வருகிறார்.