திமுக தலைவர் ஸ்டாலின் பாத்திமா சில்மிஷம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாத்திமாபாபு..!!
ஸ்டாலின் பாத்திமாபாபு ஆகியோர் மீது பரப்பபட்ட வதந்தியை யாரும் இன்னும் மறந்திருக்கவில்லை. 30 ஆண்டுகளை கடந்தாதுலும் அந்த வதந்தி இன்னும் தமிழக அரசியல், பொதுமக்கள் என யாரையும் விட்டு அகலாமல் கொரோனா போல் பரவிக்கொண்டே இருக்கிறது. அப்படிபட்ட வதந்திக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பாத்திமாபாபு.
T.Balamurukan
ஸ்டாலின் பாத்திமாபாபு ஆகியோர் மீது பரப்பபட்ட வதந்தியை யாரும் இன்னும் மறந்திருக்கவில்லை. 30 ஆண்டுகளை கடந்தாதுலும் அந்த வதந்தி இன்னும் தமிழக அரசியல், பொதுமக்கள் என யாரையும் விட்டு அகலாமல் கொரோனா போல் பரவிக்கொண்டே இருக்கிறது. அப்படிபட்ட வதந்திக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பாத்திமாபாபு.
ஒரு வதந்தி உண்மையை விட படு ஸ்பீடாக வேகமெடுக்கும். மக்கள் மத்தியில் பரவும். இதே போன்று தான் திமுக தலைவர் ஸ்டாலின் இளமைக்காலத்தில் தூர்தர்ஷ்னில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமாவை கடத்திச் சென்று சில்மிஷம் செய்தார் என்கிற செய்தி மக்கள் மத்தியில் பல வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் உருட்டிவிட்ட வதந்தி அமைதியாக இருந்தது.
பெண் ஒருவரை இடுப்பில் கிள்ளும் சம்பவத்திற்கு பிறகு அதிமுக ஐடி விங் பழைய வதந்தியை கிளப்பி மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை பாத்திமாபாபு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
"நான் தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளராக இருந்ததேன். அப்போது 'சித்திரபாவை' என்னும் டிவி தொடரில் நடித்ததால் அங்கே செய்திவாசிப்பாளராக தொடர முடியவில்லை.தொடரவும் முடியாது என்பது தான் ரூல். அந்த சமயத்தில் தான் ஸ்டாலின்; என்னை கடத்தி சில்மிசம் செய்தார் என்று பொய்யான செய்திகள் பரப்பபட்டது. அப்போதே அப்படியொரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று குமுதம் இதழுக்கு நான் பேட்டியளித்திருந்தேன். அந்த பேட்டி வெளியாக வில்லை. ஒரு கட்சி தலைவரை அசிங்கப்படுத்த நினைத்து அதில் என்னை பயன்படுத்துவது தவறு. நான் உண்மையை சொன்ன பிறகும் என்னை தொடர்பு படுத்தி மீம்ஸ் போடுவது தவறானது என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்." பாத்திமாபாபு.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் பாத்திமா.அதன் பிறகு ஜெயா டிவியில் பத்தாண்டுகள் தொடர்ந்து செய்திவாசிப்பாளராகவும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார் பாத்திமா. ஜெ.மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்த டீமில் இணைந்து கொண்டார். தற்போது ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார் பாத்திமா.