திமுக பொதுசெயலாளர் அன்பழகன் உடல் நலக்குறைவால் மரணம்.! சோகத்தில் ஸ்டாலின், திமுக தொண்டர்கள் !!
தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 98.பல மாதங்கள் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்தார். நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரது இறப்பு தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
T>Balamurukan
தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 98.பல மாதங்கள் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்தார். நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரது இறப்பு தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர், கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
கடந்த மாதம் 24-ந்தேதி அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை சென்று அன்பழகனை நேரில் பார்த்து, அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், அன்பழகனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், வயது முதிர்வின் காரணமாக அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலன் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு அவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நேற்று இரவு 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.நள்ளிரவு 1.10 மணி அளவில் அன்பழகன் மரணம் அடைந்தார்.அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க கதறி அழுதார். மருத்துவமனைக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.
அன்பழகன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி அஞ்சலி செலுத்த போய் கொண்டிருக்கிறார்கள்.