திமுகவில் சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை மேற்கு,  சென்னை தென்மேற்கு மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை அறிவித்துள்ளது. 

திமுகவில் சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை வடக்கு மாவட்டம், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.சென்னை வடகிழக்கு மாவட்டம்

* மாதவரம்
* திருவொற்றியூர்

2.சென்னை வடக்கு மாவட்டம்

* இராதாகிருஷ்ணன் நகர்
* பெரம்பூர்
* இராயபுரம் 

சென்னை வடகிழக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - எஸ். சுதர்சனம்

சென்னை வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - தா.இளையஅருணா

3.சென்னை மேற்கு மாவட்டம்

* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
* ஆயிரம்விளக்கு
* அண்ணா நகர்

4. சென்னை தென்மேற்கு மாவட்டம்

* தியாகராயர் நகர்
* மயிலாப்பூர்

சென்னை மேற்கு மாவட்டம்

 பொறுப்பாளர் - நே.சிற்றரசு,

சென்னை தென்மேற்கு மாவட்டம்

 பொறுப்பாளர் - மயிலை த.வேலு ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.