தொண்டர்களை நேரில் சந்தித்து கைகூப்பி வணக்கம் தெரிவித்த விஜயகாந்த்
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நேரில் வந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. கட்சி சார்பாக நடத்தப்படும் முக்கிய நிகழ்ச்சிகளில் கூட அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தான் பங்கேற்று வந்தார். விஜயகாந்தை நீண்ட நாட்களாக பார்க்காததால் கட்சி தொண்டர்கள் சற்று சுறுசுறுப்பற்ற நிலையில் இருந்தனர்.
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசு வழங்கிய முதல்வர்; அகவிலைப்படி 38% உயர்வு
இந்நிலையில், கட்சியின் தலைவர் விஜயகாந்த் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகளை நேரில் சந்திப்பார் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்தை சுமார் 4, 5 பேர் சக்கர நாற்காலியில் அமர வைத்தபடி தொண்டர்களை பார்க்க அழைத்து வந்தனர்.
6வது நாளாக உண்ணாவித போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்; குழு அமைக்க முதல்வர் உத்தரவு
நாற்காலியில் அமர முடியாமல் தல்லாடியபடி இருந்த விஜயாந்தை அவரது மகன்கள், நிர்வாகிகள் சிலர் அவர் நாற்காலில் அமர வைத்தபடி தாங்கி பிடித்திருந்தனர். அப்போது தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியும், கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்தபடியும் விஜயகாந்த் தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கேப்டன், கேப்டன் என விண்ணை பிழக்க கேசமிட்டனர். மேலும் விஜயகாந்த் குணமடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி பலரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.