கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வரும் நிலையில், ஒற்றுமையை காட்டும் வகையில், மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றியும்,வானவேடிக்கை வெடித்தும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று திருக்கார்த்திகை போலவும்,தீபாவளியை போலவும் மக்கள் நாடு முழுவதும் கொண்டாடி இருளில் இருந்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
T.Balamurukan
கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வரும் நிலையில், ஒற்றுமையை காட்டும் வகையில், மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றியும்,வானவேடிக்கை வெடித்தும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று திருக்கார்த்திகை போலவும்,தீபாவளியை போலவும் மக்கள் நாடு முழுவதும் கொண்டாடி இருளில் இருந்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்


இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் முதலவர் எடப்பாடி,துணைமுதல்வர் ஓபிஎஸ்,நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என தமிழகத்தின் பிரபலங்கள் அகல்விளக்கு ஏற்றியும், டார்ச் லைட் அடித்தும் இந்தியாவை ஒளிரவிட்டிருக்கிறார்கள்.

மதுரையில் இந்து ,முஸ்லீம்,கிறிஸ்தவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றினார்கள். வீதிகள் தோறும் திருக்கார்த்திகை போலும்,தீபாவளி போலும் வானவேடிக்கைகள் வெடித்தும் மக்கள் கொரோனாவுக்கு எதிராக தங்கள் வீட்டுகளில் பிராத்தனைகள் செய்தும் ,மணியோசை எழுப்பியும் இறைவனை வழிபட்டார்கள். மேற்கத்திய நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைக்கும் இந்தியாவிற்கு செவ்வாய் ஆதிக்கம் இருப்பதால் பாதிப்பு இருக்காது என்கிறது நம்முடைய ஜோதிடம்.அதேபோல் தற்போது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நம்முடைய நாடு ஆன்மீகநாடு. நிச்சயம் கொரோனாவில் இருந்து ஆன்மீகம் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் எடுக்கும் முயற்சி நல்ல பலனை தரும் என்கிறது ஆன்மீக தரப்பு. பொருத்திருந்து பார்ப்போம்....
