தீபா அதிரடி சரவெடி - ஆர்.கே.நகரில் ஆதரவாளர்கள் பிரசாரம்
இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஆர்.கே.நகரில் தீபா ஆதரவாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று ஜெயல்லிதா அண்ணன் மகள் தீபா நேற்று தெரிவித்திருந்தார். முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தால் ஏற்கத் தயார் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தீபா கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தீபா ஆதரவாளர்கள் ஆர்.கே. நகரில் முகாமிட்டு வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்ட வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை தோலூரித்துக் காட்ட தீபாவுக்கு வாக்களியுங்கள் என்ற கோஷத்துடன் இவர்கள் முன்வைக்கும் பிரசார உக்தி பயனளிக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்...