Asianet News TamilAsianet News Tamil

30 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது…. சிறை செல்லும் பிரபல கிரிக்கெட் வீரர்….

cricketter siddu will jailed for murder case
cricketter siddu will jailed for murder case
Author
First Published Apr 13, 2018, 11:48 PM IST


பஞ்சாப் மாநில அமைச்சரும்,  முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து மீதான கொலை வழக்கு 30 ஆண்டுகள் இழுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டு சித்து சிறை செல்வது உறுதியாகி உள்ளது

கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் சித்து,  ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் குர்னாம்சிங் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். வார்த்தைப் போர் முற்றியதில் அந்த முதியவலை சித்து தாக்கியுருக்கிறார். இதில் காயமடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

cricketter siddu will jailed for murder case

இதையடுத்து  சித்து மீது கொலை வழக்கு பதவி செய்யப்பட்டு பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றத்தில்  இந்த வழக்கின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு சித்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால், முதியவர் சித்து தாக்கி மரணமடையவில்லை மாரடைப்பால்தான் இறந்தார் என சித்து தரப்பில் வாதிடப்பட்டது. அற்றொரு தரப்பில்  சித்து தாக்கியதில் முதியவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால்தான் மரணமடைந்தார் என கூறப்பட்டது. 

cricketter siddu will jailed for murder case

இந்த வழக்கு சுமார் 30 ஆண்டுகள் இழுத்தடிக்கப்ப்ட்டது. . தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், முன்னர் வழங்கிய தீர்ப்பின் படி சித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து சித்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios