Asianet News TamilAsianet News Tamil

ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஊழல் செய்வது மட்டுமே வேலை.! குற்றம் சாட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்..!

ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் முறைகேடு செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
 

Corruption only works for corrupt Minister Vijayabaskar! Stalin to blame DMK leader ..!
Author
Tamil Nadu, First Published Sep 11, 2020, 7:50 AM IST

அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சரி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சரி, கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, அவர்களுக்கு முக்கியமான பணி அல்ல… ஊழல் செய்வது மட்டுமே அவர்களின் ஒரே பணி! அதனால்தான் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னால் போய் விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை ஊழல்களை நாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.என்றும்,ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் முறைகேடு செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Corruption only works for corrupt Minister Vijayabaskar! Stalin to blame DMK leader ..!

திமுக தலைவர் முக. ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் பேசும் போது.. 

 "மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை. அவர் முதலில், ‘குட்கா ஊழலிலும்’ இப்போது கொரோனா ஊழலிலும்’ பிஸியாக இருப்பதால்  தமிழக மக்களை மட்டுமல்ல சொந்த புதுக்கோட்டை மாவட்டத்தையே கொரோனாவிலிருந்து அவரால் காப்பாற்ற முடியவில்லை. புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு 7ஆயிரத்தை  தாண்டி விட்டது. கொரோனாவால் மரணம் 116–ஐ தாண்டி விட்டது. இதுவும் உண்மைக் கணக்கா என்றால் அதுவும் இல்லை. கொரோனா நோய்த் தொற்றையும், அதனால் ஏற்பட்ட இறப்புகளையும் குறைத்துக் காட்டியே, இன்றைக்குப் புதுக்கோட்டை மாவட்டம் கொரோனாவின் கடுமையான பாதிப்பில் இருக்கிறது. கொரோனா தொல்லை இப்படியென்றால் ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர்ப் பணிகளைச் செய்யக் கூட நிதி கொடுப்பதில்லை. ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பணிகளை இங்குள்ள ஆட்சியர் ‘பேக்கேஜ் டெண்டர்’ விடுகிறார். அவர் முன்பு, விஜயபாஸ்கரின் துறையில் பணியாற்றி விட்டு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக வந்தவர். பேக்கேஜ் டெண்டரை எதிர்த்து வழக்குப் போட்டால் அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வைக்க ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் முன்தேதியிட்டு தீர்மானம் போட்டுத் தரச் சொல்லி மிரட்டுகிறார். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி மூலம் மாவட்டத்தில் உள்ள 490-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை மிரட்டுகிறார் என்றால்  அதற்கு எப்படி தைரியம் வந்தது? அதனால்தான் நான் விடுத்த அறிக்கையில், “இப்படி முன்தேதியிட்டு தீர்மானம் பெறுவது” கிரிமினல் சதி என்று எச்சரித்தேன்.

Corruption only works for corrupt Minister Vijayabaskar! Stalin to blame DMK leader ..!

 ஊழல் அமைச்சர் புதுக்கோட்டையில் இருப்பதால், இங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவரும் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் தைரியமாக இறங்குகிறார். அவர் நாளை, சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டியதிருக்கும். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சரி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சரி, கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, அவர்களுக்கு முக்கியமான பணி அல்ல… ஊழல் செய்வது மட்டுமே அவர்களின் ஒரே பணி! அதனால்தான் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னால் போய் விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை ஊழல்களை நாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.  

Follow Us:
Download App:
  • android
  • ios