104 நாடுகளில் கொரோனா வைரஸ்...!! 1 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு..!!
மேலும் 23 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பதால் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்தியாவில் நேற்று முன்தினம் வரை வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது , அதில் 16 பேர் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர்கள்.
உலகம் முழுவதும் சுமார் 104 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது . கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , அமெரிக்கா தென்கொரியா உள்ளிட்ட 104 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது , வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது , இந்தியாவில் மட்டும் வைரஸ் அறிகுறி உள்ள 54 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதுவரையில் சீனாவில் மட்டும் 3042 பேர் உயிரிழந்துள்ளனர் , 80 552 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 148 பேரும் , ஈரானில் 124 பேரும் வைரஸ் தாக்கியதில் பலியாகியுள்ளனர் . அமெரிக்காவில் கூட கொரோனா , பரவலைத் தடுக்க முடியவில்லை .
அந்நாட்டில் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது . வைரஸ் பாதித்த வர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது . இதனால் அமெரிக்க மக்களும் பெரும் பீதியில் உள்ளனர் . இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்திற்கு வந்துள்ள கிராண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன இதனால் அந்தக் கப்பலில் 1800 பேர் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது அதேபோல் செர்பியா , வாடிகன் சிட்டி , கேமரூன் , செனகல் , போன்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் நேற்று புதிதாக பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 23 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பதால் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்தியாவில் நேற்று முன்தினம் வரை வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது , அதில் 16 பேர் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர்கள். அனைவருக்கும் டெல்லி ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது . இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கையாக சுகாதார பணிகளை மத்திய அரசு முடுக்கி உள்ளது . அதேபோல் எல்லா மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் .