ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசவில்லை. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது கண்டனம் தெரிவித்ததோடு அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து பேசினார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சுமார் 15 நாட்களுக்கு மேல் சிபிஐ கஷ்டடியில் இருந்த ப.சிதம்பரம். கடந்த 20 நாட்களாக டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பலமுறை அணுகியும் சிபிஐ எதிர்ப்பால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

