Asianet News TamilAsianet News Tamil

தமிழக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 7 மணியளவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

CM EdappadiPalaniswami meet Governor BanwarilalPurohit
Author
Chennai, First Published Oct 5, 2018, 11:58 AM IST

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 7 மணியளவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. CM EdappadiPalaniswami meet Governor BanwarilalPurohit

ஆளுநர் பன்வாரிலால் - முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆலோசனையாக இருக்குமா? அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடு கொண்டுள்ளனர்.CM EdappadiPalaniswami meet Governor BanwarilalPurohit

சட்டமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களும் இருந்து வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனை இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios