நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்தச் சட்டம் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வட கிழக்கு மா நிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது..

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


குடியுரிமை சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி உள்ள நிலையில், எளிமையாக இச்சட்டம் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், இச்சட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.