central minister pon.radha krishnan

நெடுவாசலலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அவர் உரையாற்றிய போது, " தமிழ்ச் சொந்தங்களில் ஒருவனாக உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளேன். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் மோடி தலைமையிலான அரசு திணிக்காது...

விவசாயத்தில் உள்ள கஷ்டங்கள் நஷ்டங்கள் எனக்கும் தெரியும் அரசியலுக்கு வருவதற்கு முன் நான் ஒரு விவசாயி.மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்..


வரும் 15 அல்லது 16 தேதிகளில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடருவதா என்பது குறித்து முடிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.