Asianet News TamilAsianet News Tamil

எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை..!! மத்திய சுகாதாராத்துறை அறிவுரை..!!

வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கூட பலர் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது . பல இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என  மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது .

central health ministry create awareness regarding corona virus fear and mask  wearing
Author
Chennai, First Published Mar 17, 2020, 3:21 PM IST

கொரோனா அச்சத்தால் எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை ,  கொரோனா  நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே அணியலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது . கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளியிட்டுள்ள 15 அம்ச அறிவுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது .   இதுவரை உலக அளவில் இந்த வைரசுக்கு  7,200 பேர் உயிரிழந்துள்ளனர் .   உலக அளவில் ஒரு லட்சத்தில் 30 ஆயிரத்துக்கும்  அதிகமானோருக்கு இந்த வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் பல்வேறு நாடுகளில் கொரோனாவை  தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தி வருகின்றன. 

central health ministry create awareness regarding corona virus fear and mask  wearing

இந்தியாவையும்  இந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை ,   இந்தியாவும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது .  இந்த வைரசை கட்டுப்படுத்த 15 அம்ச அறிவுரைகளை மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது .   அதில் கல்வி நிறுவனங்கள் உடற்பயிற்சி கூடங்கள் ,  நீச்சல் குளங்களை  மூடுவது பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள் ரயில்கள் விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன .   அதேபோல் கொரோனா பரவும் பகுதிகளில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் பரவலாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது.   வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கூட பலர் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது .  பல இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

central health ministry create awareness regarding corona virus fear and mask  wearing

ஆனால் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என  மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது .   இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த  மத்திய சுகாதாராத்துறை டுவிட்டரில் தெளிவான விளக்கப்படம் வெளியிட்டுள்ளது .   எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை இருமல் காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறி ஏற்பட்டால் மட்டுமே  மாஸ்க் அணிய வேண்டும் . கொரோனா  வைரஸ் உறுதி செய்யப்பட்டாலோ ,  தொடர்பான தாக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டால் மாஸ்க் அணிய வேண்டும் .   அதேபோல் சுவாசப் பிரச்சனை  உள்ள நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது .   அதேபோல் எப்படி மாஸ்டர் பயன்படுத்த வேண்டும் என்பது விளக்கமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios