இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் முழு விவரம்...!! எந்தெந்த மாநிலம் ஆபத்தில் உள்ளது தெரியுமா..!!
தனுடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது . அதில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் , அதில் ஒருவர் பலியான நிலையில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது . இதுவரை உலக அளவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் . சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத் தொடங்கியுள்ளது . இதுவரை சுமார் 75 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் பாதிக்கப்பட்டவர்கள் 58 பேர் இந்தியர்கள் 17 பேர் வெளிநாட்டினர் ஆவர் , அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் 11 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 10 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . டெல்லியில் 6 பேருக்கும் கர்நாடகாவில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மேலும் லடாக் , ராஜஸ்தான் , தெலுங்கானா , தமிழ்நாடு , ஜம்மு-காஷ்மீர் , ஆந்திரா , பஞ்சாப் , உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும். கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது . ஹரியானாவில் 14 பேருக்கும் ராஜஸ்தானில் இரண்டு பேருக்கும் என மொத்தம் 17 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனுடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் திரும்பிய 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் , கொரோனா வைரசால் உயிரிழந்த முதல் பலி என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது . இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . சீனாவில் இந்த வைரஸ் வேகமாக குறைந்து வந்தாலும் ஈரான் , இத்தாலி , போன்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது . இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.