Asianet News TamilAsianet News Tamil

பொது இடத்தில் 'தம் ' அடித்தால் இனி ஆப்பு...!! புதிய சட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..!!

பிறர் உள்ளிழுத்து விடும் புகையை மற்றவர்கள் சுவாசிப்பதால்  உலகத்தில் ஆண்டிற்கு  6 லட்சம் பேர் இறக்கின்றனர் ,  அதில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள் .  ஆகவே பொது இடத்தில் புகை பிடிப்பது இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும் 

central government plan to increase  penalty for smokers in public place
Author
Chennai, First Published Feb 25, 2020, 11:58 AM IST

பொது இடத்தில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆகவே மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர்  ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் . பொதுஇடங்களில்  வெளியிடப்படும் புகையால் ஆண்டிற்கு உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் , இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு :-

central government plan to increase  penalty for smokers in public place 

பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது .  புகைத் தடுப்புச் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டாலும் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல்  விடப்பட்டது பொது இடங்களில்  புகை பிடிப்போருக்கு அதிகபட்சமாக 200 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது ,  சில நேரங்களில் 50 ரூபாய்கூட வசூலிக்கப்படுகிறது பொதுஇடத்தில் வெளியிடப்படும் புகையில் 7 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன .  அதில் 69 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவையாகும். 

central government plan to increase  penalty for smokers in public place

பிறர் உள்ளிழுத்து விடும் புகையை மற்றவர்கள் சுவாசிப்பதால்  உலகத்தில் ஆண்டிற்கு  6 லட்சம் பேர் இறக்கின்றனர் ,  அதில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள் .  ஆகவே பொது இடத்தில் புகை பிடிப்பது இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும் .  பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு அபராத தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது . இந்தக் கட்டுப்பாடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்மைபயக்கும் மத்திய அரசு உடனே  அபராதத்  தொகையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என அவர் கூறியுள்ளார் .

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios