27 மாதங்கள் கழித்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டதை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்தன. இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தினார். இதன் காரணமாக நீட் விலக்கு தொடர்பான மசோதாக்கள் தமிழகத்தில் பேசுபொருளாயின.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 2 மசோதாக்களை 2 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்று தமிழக பாஜக மா நில செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
 நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. ஆனால், அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டுவிட்டதாக தமிழக அரசியல் கட்சிகள் நினைத்துவந்தன. இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்டத்தை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


27 மாதங்கள் கழித்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டதை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்தன. இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தினார். இதன் காரணமாக நீட் விலக்கு தொடர்பான மசோதாக்கள் தமிழகத்தில் பேசுபொருளாயின.