சூறாவளியாய் சுற்றிச் சுழலும் பினராயி விஜயன்… மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கை..கொச்சியிலேயே தங்கி அதிரடி பணிகள்..

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில்இல்லாதஅளவிற்குதொடர்ந்து கனமழைபெய்துவருகிறது. அம்மாநிலத்தின்வடக்குமற்றும்மத்தியபகுதிகள்கடும்பாதிப்புக்குஉள்ளாகியுள்ள. அதாவது இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் , எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.

குறிப்பாகமுதலமைச்சர் பினராயிவிஜயன்பாதிக்கப்பட்டபகுதிகளுக்கும், அங்குவசிக்கும்மக்களையும்நேரில்சந்தித்துவருகிறார். இதுவரைசுமார்ஆயிரக்கணக்கான குடும்பங்களைசந்தித்துள்ளதாகதெரிகிறது

தொடர்ந்து மற்றகுடியிருப்புபகுதிகளுக்கும், அங்குள்ளமக்களையும்சந்தித்துபேசி வருகிறார். மழையினால்வீடு, வாசல்களைஇழந்த 54 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர்தற்காலிகமாகஅமைக்கப்பட்டுஉள்ள 439 நிவாரணமுகாம்களில்தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். அவர்களையும் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் தலைநகர் திருவனந்தபுரம் செல்லாமல் கொச்சியிலேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திந்தித்து வருவதோடு, உடனயாக அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட்டு வருகிறார்.

அவர் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும்போதும் எதிர்க்கட்சியினரையும் உடன் அழைத்துச் செல்கிறார். அவர்களிடமும் நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்கிறார். தனது உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாது தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடையே நிவாரணப்பணிகளைமேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்குஉதவவும்பொதுமக்கள்தங்களால்முடிந்தஉதவிகளைவழங்கலாம்என்றுபினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.