பீகார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மி என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

பீகார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மி என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து திருச்சியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘’பீகார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மி. ஆனால், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், 4,000க்கும் மேற்பட்ட பீகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுதும் ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பராக அவர்களை காணமுடியும். தமிழும் தெரியாது. ஹிந்தியும் தெரியாது. அதற்கு காரணம் அப்போது ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தான். மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சோபிக்கவில்லை. மத்திய அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற நாம் முயலவில்லை. ரயில்வே, வங்கி உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளிலும் பிற மாநில மக்களுக்கு, 10% ஒதுக்கீடு செய்யப்படுகிறது.