Asianet News TamilAsianet News Tamil

அயோத்தி வழக்கில் தீர்ப்பு !! அலறி அடித்து ஊரைவிட்டு ஓடும் பொது மக்கள் !!

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து, பாதுகாப்பு கருதி அங்குள்ள மக்கள் அலறி அடித்து ஊரைவிட்டு ஓடத் தொடங்கியுள்ளனர்.

ayothi case people out from ayothi
Author
Ayodhya, First Published Nov 7, 2019, 11:05 PM IST

பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4 ம் தேதி முதல் தொடர்ந்து 10 வேலை நாட்களில் முக்கியமான 4 வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், அதில் அயோத்தி வழக்கும் ஒன்று எனவும் கூறப்பட்டது.

ayothi case people out from ayothi

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் நவம்பர் 14ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் நவம்பர் 13 அல்லது அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறக்கபிக்கப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டது.

ayothi case people out from ayothi

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் உளவுத்துறை அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். உபி.,யில் 4000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ayothi case people out from ayothi

144 தடை உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு கருதி அயோத்தி மக்கள், குடும்பம் குடும்பமாக ஊரை விட்டு ஓடத் தொடங்கியுள்ளனர். 

ayothi case people out from ayothi

சிலர் முன்னெச்சரிக்கை நடவக்கையாக உணவு பொருட்களை இப்போதே சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios