எனது மகளின் ஆசைக்காக நான் தாடி வைத்துள்ளளேன் என்றும் இதில் வேறு எந்த ஒரு ரகசியமும் இல்லை எனவும்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் ரொம்ப ஸ்மார்ட் ஆனவர் என பெயரெடுத்தவர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். அது மட்டுமல்லாமல் குடும்பத்தின் மீதும், தொண்டர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். அவர் எப்போதுமே நன்றாக ஷேவ் பண்ணி, தூய்மையாகவும், ஸ்மார்டாகவும் இருப்பார். ஆனால் தற்போது அவர் கருகரு என தாடி வைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் காவிரிஉபரிநீரைகடலில் கலக்கி வீணாக்காமல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்குதிருப்பிவிடக்கோரி 10 லட்சம் கையெழுத்துபெறும்இயக்கத்தைதுவக்கிவைத்தார்அன்புமணி ராமதாஸ்.

தர்மபுரிபேருந்துநிலையத்தில்நடைபெற்றநிகழ்ச்சியில், விவசாயிகள்உள்ளிட்டஏராளமானோர்பங்கேற்றுகையெழுத்துபோட்டனர். 10 லட்சம்பேரிடம்கையெழுத்துபெற்றபின், தமிழகமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமியிடம்மனுவாகஅளிக்கப்படஉள்ளது. இந்நிகழ்ச்சியில்பேசியஅன்புமணி, உபரிநீரைஏரி, குளங்களுக்குதிருப்பிவிடுவதன்மூலம், விவசாயிகள்பயன்பெறுவார்கள்என்றார்.

இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தான் தான் கொண்டு வந்ததாக அன்புமணி பேசினார்.

தற்போது அன்புமணி ராமதாஸ் தாடி வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என எனது மகள் ஆசைப்பட்டார். அவரது ஆசைக்காக தாடி வளர்த்துள்ளதாக கூறி, தான் தாடி வைத்துள்ள ரகசியத்தை உடைத்தார்.