வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர்கருணாநிதிஉடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 7–ந்தேதிமரணம்அடைந்தார். அவரதுஉடல்மெரினாகடற்கரையில்அண்ணாசமாதியின்பின்புறம்உள்ளஇடத்தில்அடக்கம்செய்யப்பட்டது.
இந்நிலையில் மறைந்ததி.மு.க. தலைவர்கருணாநிதிக்குபுகழ்வணக்ககூட்டங்கள் திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. மதுரை. கோவை, திருச்சி போன்ற நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிகளின் நிறைவாகசென்னைநந்தனம்ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 30–ந்தேதிமாலை 4 மணிக்குதெற்கில்உதித்தெழுந்தசூரியன்’ என்றதலைப்பில்கூட்டம்நினைவேந்தல் கூட்டம் நடைபெறஇருக்கிறது.
கருணாநிதிபுகழ்வணக்ககூட்டத்தில்பாஜக சார்பில் அக்கட்சியின்தேசியதலைவர்அமித்ஷாபங்கேற்கிறார்எனதிமுகதரப்பில்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டத்தில்பா.ஜனதாகட்சியின்தேசியதலைவர்அமித்ஷாகலந்துகொள்வதுஎதிர்வரும்நாடாளுமன்றதேர்தலில்புதியகூட்டணிக்குஅச்சாரமாகஇருக்குமோ? என்றுஅரசியல்வட்டாரத்தில்பரபரப்பாகபேசப்படுகிறது. புதிதாக திமுக – பாஜக கூட்டணி உருவாகப் போகிறது என பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில்பா.ஜனதாதலைவர்களில்ஒருவரானசுப்பிரமணியசாமிதனது டுவிட்டர் பக்கத்தில் திமுககூட்டத்தில்அமித்ஷாபங்கேற்கபோவதில்லைஎனமுடிவுசெய்திருப்பதுமகிழ்ச்சியைதருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்களை பாஜகவினரே மதிப்பதில்லை. அவர் எது சொன்னாலும் அது அவரது தனிப்பட்ட கருத்துஎனமற்ற தலைவர்கள் சொல்லி சமாளித்து விடுவார்கள். அதே போன்றுதான் இதுவும் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..
