திருவாரூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த கருணாநிதியின் மூத்த மகனுமாக அழகிரி, அங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையைக்கூட செலவு செய்யாமல் உறுதியாக வெற்றி பெறுவேன் எனவும் கூறி திமுகவினருக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பலமுறை முயன்றும் மீண்டும் திமுகவில் சேர முடியவில்லை. கருணாநிதி மறைந்த பிறகும் அவரை திமுகவில் சேர்த்துக் கொள்ள ஸ்டாலின் முன்வரவில்லை.

இதையடுத்து அவர் திமுகவுக்கு எதிராக சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி ஒன்றை நடத்தினார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. இதையடுத்து அவர் தனி அணியாக செயல்படப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று அழகிரி, திருவாரூர் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது பேசிய மு.க.அழகிரி, திருவாரூர்சட்டசபைஇடைத்தேர்தலில், நான்போட்டியிடவேண்டும்என, பலர்கூறிவருவதாக தெரிவித்தார்.

கருணாநிதியுடன், 2011ல், தேர்தல்பிரசாரத்தின்போது, திருவாரூருக்குவந்தேன். தந்தைஇறந்தபின், தற்போதுதான்வந்திருக்கிறேன். திருவாரூர்இடைத்தேர்தலில், நான்போட்டியிடவேண்டும்என, பலர்கூறிவருகின்றனர்; சிலர், அன்புகட்டளைஇடுகின்றனர்.அவர்களிடம், தேர்தல்வந்தால்பார்த்துக்கொள்வோம்என, கூறியுள்ளேன். ஏனெனில், இடைத்தேர்தலேவேண்டாம்என, மேலிடத்துக்கு, சிலர்கூறிவருவதாகதகவல்கள்வருகின்றன

இடைத்தேர்தல்நடந்து,நான்போட்டியிட்டால், தேர்தல்ஆணையம்நிர்ணயித்துள்ளதொகையைகூடசெலவுசெய்யாமல், நான்வெற்றிபெறவாய்ப்புஉள்ளது. இடைத்தேர்தலில்ஓட்டுகேட்பேனோ, இல்லையோ; எனக்குஇழைக்கப்பட்டஅநீதிக்கு, மக்களிடம்நியாயம்கேட்பேன். என குறிப்பிட்டார்.

தனிகட்சிதொடங்கும் எண்ணமில்லை என்றும். கருணாநிதிவழியைபின்பற்றி, எதிர்காலத்தில்நடப்போம் என்றும் கூறிய அழகிரி, ரஜினி, பாஜக, மற்றும்என்னைஇணைத்துவரும்அரசியல்தொடர்பானசெய்திகள்எல்லாம்வெறும்வதந்திகள் என்றார்.

ஸ்டாலினைதலைவராகஏற்றுக்கொள்ளதயார்என, பலமுறைகூறிவிட்டேன். அவர்களிடம்இருந்து, எந்தபதிலும்இல்லை. தமிழகத்தில்அரசியலும்சரியில்லை; ஆட்சியும்சரியில்லை என அழகிரி குற்றம்சாட்டினார்.