விமானத்தில் பயணம் செய்யும்போது ஏர்ஹோஸ்டஸ் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சீமான் சிலாகித்து பேசியுள்ளார். 

விமானத்தில் பயணம் செய்யும்போது ஏர்ஹோஸ்டஸ் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சீமான் சிலாகித்து பேசியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும். அவரது கொள்கைகள், நம்பிக்கைகள், செயல்பாடுகள் சில நேரங்களில் சர்ச்சையாவது வாடிக்கை. அவர் மீது நடிகை விஜயலட்சுமி தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக அவ்வப்போது புகார் தெரிவித்து வருகிறார். இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதிரடி அரசியல் செய்து வருகிறார் சீமான். 

இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ’வானூர்தியில் ஏறினால் விமானப்பணிப்பெண்கள், சேவைபெண்கள், என்னை எப்படி கண்டு பிடிப்பார்கள் என்று தெரியவில்லை. என்னைப்பார்த்தவுடன் வணக்கம் தெரிவிக்கிறார்கள். அது ஆள் தெரிகிறது. ஆள் பார்த்து செய்கிற வேலை அது’’என வெட்கப்பட்டுள்ளார். 

Scroll to load tweet…

இதற்கு கருத்து தெரிவித்துள்ள பலரும், ‘பிளைட்டில் ஏறும்போது பணிப்பெண்கள் எல்லாருக்குமேதான் வணக்கம் சொல்லுவாங்க.. என்னமோ உனக்கு மட்டும் வணக்கம் வெக்கிற மாதிரி சொல்கிறீர். பொய் பேசலாம், கிலோ கணக்குல எல்லாம் பேசப்படாது’’எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.