Actor Balakrishna speech against MOdi

ஆந்திர மாநிலத்துக்கு துரோகம் இழைத்த பிரதமர் மோடி அவர்களே நீங்கள் இங்கு வந்தால் எங்கள் மக்கள் உங்களை ஓட, ஓட விரட்டி அடிப்பார்கள் என்றும் அப்புறம் நீங்க பதுங்கு குழிக்குள்தான் இருக்க வேண்டும் என்றும் மறைந்த ஆந்திர முதலமைச்சர் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து தனது பிறந்தநாளான நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில பாஜகவினர் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக அவதூறு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.