தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டமாக டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் நடந்தன. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 76.19 சதவீத வாக்குகள் பதிவாயின். இரண்டாம் கட்டத் தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களையும் சேர்த்து சராசரியாக 77 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். 

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டமாக டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் நடந்தன. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு முதல் கட்டமாக 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு டிச. 27 அன்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.