ஜெயலலிதாவை விஞ்சிவிடுவார் போல சசி! ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட தமிழக அரசியல் எப்போதும் தன்னை சுற்றியே வட்டமடிப்பது போல் பார்த்துக் கொள்வார் ஜெ., அவர் மறைந்துவிட்டார். இந்நிலையில், நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைபட்டிருக்கிறார் சசி. ஆனால் தமிழக அரசியல் பரபரப்புகள் என்னவோ அவரை மையப்படுத்தியேதான் அடிக்கடி புயலடிக்கின்றன. 

ஜெயலலிதாவை விஞ்சிவிடுவார் போல சசி! ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட தமிழக அரசியல் எப்போதும் தன்னை சுற்றியே வட்டமடிப்பது போல் பார்த்துக் கொள்வார் ஜெ., அவர் மறைந்துவிட்டார். இந்நிலையில், நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைபட்டிருக்கிறார் சசி. ஆனால் தமிழக அரசியல் பரபரப்புகள் என்னவோ அவரை மையப்படுத்தியேதான் அடிக்கடி புயலடிக்கின்றன. பல நேரங்களில் டெல்லி அரசியலும் சசியை ரெஃபர் செய்வதுதான் ஆச்சரியம் பிளஸ் அதிர்ச்சி. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ‘சசி விரைவில் சிறையை விட்டு வெளியே வருவார். மீண்டும் அ.தி.மு.க.வின் தலைமை பீடத்தில் அமர்வார்’ என்று ஒரு ஜோஸியம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவோ ’சசி மீது வெளியே வர முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வழக்கு பாய இருக்கிறது.’ என்கிறார்கள். 


இதற்கான ஒத்திகையாகவே அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் போலி நிறுவனங்களில் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட விவகாரத்தை குறிப்பிடுகிறார்கள். அதாவது சில மாதங்களுக்கு முன் போயஸ்கார்டன், கொடநாடு உள்ளிட்ட ஜெ மற்றும் சசி வளைய வந்த சொத்துக்களில் சுமார் ஒரு வாரத்துக்கும் மேல் ரெய்டு நடத்தப்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், பத்திரங்கள், சொத்து ஆவணங்கள், கம்பெனி முதலீடுகள் ஆகியவற்றை இதில் கண்டறிந்தது வருமான வரித்துறை. 
இத்தனை நாட்களாக அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் சுமார் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மதிப்பிலான சசி டீமின் சொத்துக்களை முடக்கியுள்ளனர். இந்த சொத்துக்களை எப்படி மெயிண்டெயின் செய்தனர்? என்று வருமான வரித்துறையின் தரப்பில் கேட்டபோது அவர்கள் சொல்லிய விளக்கம் அதிர வைக்கிறது. அதாவது சசிகலா மற்றும் அவரது உறவுகளின் வீடுகளில் டிரைவர்கள், தோட்டக்காரர், சமையல்காரர்களாக வேலை பார்த்த சுமார் இருபத்தைந்து பேரின் பெயரில்தான் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் டெபாசீட் செய்யப்பட்டு இருந்தததாம்.