Asianet News TamilAsianet News Tamil

2 டோஸ் தடுப்பூசி போட்டால் போதும். RT-PCR நெகடீவ் சான்றிதழ் தேவையில்லை.. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி.

சென்னையிலிருந்து கேரளா, மகராஷ்டிரா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ் இனிமேல் தேவையில்லை எனவும், 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே போதும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 doses of vaccine are sufficient. RT-PCR Negative Certificate is not required .. Ministry of Civil Aviation Action.
Author
Chennai, First Published Jul 22, 2021, 1:10 PM IST

சென்னையிலிருந்து கேரளா, மகராஷ்டிரா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ் இனிமேல் தேவையில்லை எனவும், 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே போதும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளா, மகராஷ்டிரா மாநிலங்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டிருந்தால், அந்த சான்றிதழை காட்டி இனி விமானங்களில் பயணிக்கலாம் என்றும், தடுப்பூசிகள் போடாதவா்கள் RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடன் தான் விமானங்களில் பயணிக்க முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனா். 

2 doses of vaccine are sufficient. RT-PCR Negative Certificate is not required .. Ministry of Civil Aviation Action.

சென்னையிலிருந்து கேரளா மாநிலம்  திருவனந்தபுரம்,கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் மற்றும் மகராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அவுரங்கபாத் ஆகிய நகா்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடன் தான் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே அமுலில் உள்ளது. ஆனால் தற்போது அதில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 2 டோஸ்கள் போட்டவா்கள், அதற்கான சான்றிதழ்களுடன் சென்னையிலிருந்து, கேரளா, மகராஷ்டிரா மாநிலங்களுக்கு விமானங்களில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 doses of vaccine are sufficient. RT-PCR Negative Certificate is not required .. Ministry of Civil Aviation Action.

அவா்களுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ்கள் தேவையில்லை. ஆனால் 2 டோஸ் தடுப்பூசிகள் போடாதவா்கள், பயண நேரத்திலிருந்து  72 மணி நேரத்திற்க்குள் எடுக்கப்பட்ட RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடனே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனா். இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனா்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios