Asianet News TamilAsianet News Tamil

க்ளைமாக்ஸில் தகுதி நீக்க வழக்கு... அடுத்த வாரமே தீர்ப்பு?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்யுங்கள் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

18 MLAs Disqualification Case; next week verdict?
Author
Chennai, First Published Aug 20, 2018, 4:28 PM IST

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்யுங்கள் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 16 பேரும் நீதிமன்றத்தை நாடினர்.

 18 MLAs Disqualification Case; next week verdict?

இந்த வழக்கை அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் 3 நாட்கள் வாதிட்டனர். கடந்த 23 மற்றும் 24-நம் தேதிகளில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அரிமா சுந்தரமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநானும் 3 நாட்கள் வாதிட்டார். 18 MLAs Disqualification Case; next week verdict?

அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஜி வாதாடினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பி.எஸ்.ராமன் இன்று இறுதி கட்ட வாதம் செய்தார். கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என எம்எல்ஏ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கட்சி கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று வாதிடப்பட்டது. 18 MLAs Disqualification Case; next week verdict?

அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்டு சபாநாயகர் செயல்படவில்லை. எனவே அவருடைய உத்தரவை நீதிமன்றம் ஆய்வுக்குட்படுத்தலாம் என்றார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்ற யூகத்தின் அடிப்படையில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்யுங்கள் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios