இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு 1கோடி.!! கமல் அறிவிப்பு.
நேற்று நள்ளிரவு இந்தியன்2படப்பிடிப்பு நடைபெற்றது.அப்போது இந்த படத்திற்கு பிராமாண்டமான செட் போடும் பணியில் கிரேன் பயன்படுத்தப்பட்டது. திடீரென்று கிரேன் அறுந்து விழுந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர் சிதறி ஓடினார்கள். ஆனால் கிரேன் மூன்று முக்கிய நபர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விட்டது.அந்த 3பேரின் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 1கோடி வழங்கப்படும் என கமல் அறிவித்துள்ளார்.
T.Balamurukan
நேற்று நள்ளிரவு இந்தியன்2படப்பிடிப்பு நடைபெற்றது.அப்போது இந்த படத்திற்கு பிராமாண்டமான செட் போடும் பணியில் கிரேன் பயன்படுத்தப்பட்டது. திடீரென்று கிரேன் அறுந்து விழுந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர் சிதறி ஓடினார்கள். ஆனால் கிரேன் மூன்று முக்கிய நபர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விட்டது.அந்த 3பேரின் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 1கோடி வழங்கப்படும் என கமல் அறிவித்துள்ளார்.
சென்னை, அருகே கமல்ஹாசனின் இந்தியன்2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த படப்பிடிப்பு தளத்தில் பெரிய அளவிலான கிரேன் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று துணை இயக்குநர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
இந்தியன்-2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்தார்.அதன் பிறகு பேசியவர், ' நான் இங்கு எந்த நிறுவனத்தையும் சார்ந்து வரவில்லை, நான் சிறுவயதில் இருந்தே சினிமாவில் வளர்ந்தேன். இது என் குடும்பம், எனது குடும்பத்தில் கிருஷ்ணா,சந்திரன்,மது இந்த மூன்று பேரும் மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது.