Asianet News TamilAsianet News Tamil

மக்களுக்கு உதவி செய்ய இதைவிட வேற சான்ஸே கிடைக்காது! முன்வருவார்களா பணக்கார பெரும்புள்ளிகள்!

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாட்டு மக்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. 700 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 35 பேருக்கும் மேலாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 

this is right chance to help people donate rich peoples
Author
Chennai, First Published Mar 27, 2020, 6:46 PM IST

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாட்டு மக்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. 700 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 35 பேருக்கும் மேலாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மற்றவர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிகிச்சை பெற ஏதுவாக இன்று கூடுதலாக 530 மருத்துவர்களும்,1000 செவிலியர்களும் தகுதியின்  அடிப்படையில் உடனடியாக பணியில் அமர்த்த ஆணை  பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

this is right chance to help people donate rich peoples
இது ஒரு பக்கம் இருக்க சிஆர்பிஎப் வீரர்களும் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா பாதித்தவர்களுக்காக ப்ரைம் மினிஸ்டர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளனர். அதன் மதிப்பு 33 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரானா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது

அதன் படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு என்றும்  தெரிவிக்கப்பட்டு  உள்ளது

this is right chance to help people donate rich peoples

பொது நிவாரண தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக வழங்க வேண்டாம் என்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கும் மேல் உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை, 600009. சேமிப்பு கணக்கு எண்:  117201000000070, IFSC:IOBA0001172 என்ற கணக்கில் பணம் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.எனவே எண்ணமுடியாமல், கணக்கில் காட்ட முடியாமல் எவ்வளவோ சொத்து வைத்திருக்கும் பெரும்புள்ளிகளுக்கு இது தான் சரியான  நேரம் மக்களுக்கு உதவ....

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தால் அது மக்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழக அரசுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது   

Follow Us:
Download App:
  • android
  • ios