These kind of food never allow any diseases to health

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று நாம் உண்டு வரும் அரிசி வகைகள் என்னவென்று தெரியாமல், ஒரு கிலோ அரிசி விலை என்ன ? 30 ரூபாய் அரிசி இருக்கா? 40 ரூபாய் அரிசி இருக்கா என மட்டும் கேட்டு வாங்கி செல்கிறோம்....அல்லவா .?

அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சாதம் சாப்பிட கூடாது என மருத்துவர்கள் கூருகின்றனர்கள் அல்லவா..? 

ஆனால் அதே அரிசி எப்படியெல்லாம் நம் உடல் நலத்தை பாதுகாத்து வந்துள்ளது என்பதை பாருங்கள்

1. கருப்பு கவுணி அரிசி 

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி :

எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி :

பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :

தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி :

குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி :

இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி :

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி :

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி :

அமைதியான தூக்கம் வரும்.