Asianet News TamilAsianet News Tamil

வீட்ல காய்கறி இல்லனா காராமணி குழம்பு செய்ங்க.. ருசியா இருக்கும்!

Thatta Payaru Kulambu Recipe : இந்த பதிவில் தட்டைப் பயிறு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்

thatta payaru kulambu recipe in tamil mks
Author
First Published Sep 14, 2024, 1:16 PM IST | Last Updated Sep 14, 2024, 1:16 PM IST

இன்று மதியம் சமைப்பதற்கு வீட்டில் காய்கறி ஏதும் இல்லையா? என்ன குழம்பு செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்கானது தான். உங்கள் வீட்டில் தட்டைப் பயிறு இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் சுவையான குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த தட்டைப் பயிறு குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக, இந்த குழம்பு செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, சீக்கிரமே செய்து முடித்து விடலாம். இந்தக் குழம்பு நீங்கள் வீட்டில் செய்யும் போது வீடே மண மணக்கும். தட்டைப் பயிறு குழம்பை நீங்கள் சாதம் மட்டுமின்றி, இட்லி தோசை கூட வைத்து சாப்பிடலாம். இந்த தட்டைப் பெருக்குழம்பை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருமுறை செய்து கொடுங்கள், அவர்கள் அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் தட்டைப் பயிறு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்யுங்க.. ரொம்பவே ருசியா இருக்கும்!

தட்டைப்பயிறு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :

தட்டைப்பயிறு - 2 கப்
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 7
புளி சாறு - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு

சின்ன வெங்காயம் - 5
தேங்காய் - 3/4 கப் (துருவியது)
வர மிளகாய் - 7
மல்லி விதை - 2 ஸ்பூன்

இதையும் படிங்க:  கறிக்குழம்பு மிஞ்சும் சுவையில் வேர்க்கடலை குழம்பு.. ரெசிபி இதோ!

தாளிக்க

கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

தட்டைப் பயிறு குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த தட்டைப் பயிரை தண்ணீரில் நன்கு கழுவி அதை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போனதும் தட்டைப் பயிரை தண்ணீருடன் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வரமிளகாய், மல்லி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.  பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்து எடுத்த தட்டைப்பயிரை தண்ணீருடன் சேர்த்து அதில் ஊற்றவும். பின் அதை ஒரு பொது கொதிக்க விடுங்கள்.

பிறகு அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் புளிசாற்றையும் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு குழந்தை நன்றாக கொதிக்க விடுங்கள். குழம்பிலிருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் தட்டைப் பயிர் குழம்பு தயார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios