கடைகளில் விற்கும் விலை உயர்ந்த ஹேர் ஆயிலை விட, உங்கள் சமையலறையில் இருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை முடிக்கு அதிக நன்மை தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
life-style Jun 27 2026
Author: vinoth kumar Image Credits:Getty
Tamil
பொடுகு தொல்லைக்கு தீர்வு
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளை அழிக்கிறது. தேங்காய் எண்ணெய் தலையின் ஸ்கால்ப் (Scalp) வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பார்த்துக்கொள்கிறது.
Image credits: Getty
Tamil
முடியின் வேர்களை வலுப்படுத்தும்
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம், முடியில் இருக்கும் புரதச்சத்தை பாதுகாக்கிறது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கிறது.
Image credits: Getty
Tamil
தலையில் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது
எலுமிச்சை சாறு, தலையின் ஸ்கால்ப்பில் உள்ள pH அளவை சீராகப் பராமரிக்கிறது. இது அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்கி, தலையில் ஏற்படும் அரிப்பைக் குறைக்கிறது.
Image credits: adobe stock
Tamil
மென்மையான பளபளப்பான முடி
தேங்காய் எண்ணெய் முடிக்குத் தேவையான ஈரப்பதத்தை (Moisture) அளிக்கிறது. அதே சமயம், எலுமிச்சை தலையில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்கிறது. இதனால், முடி பட்டுப் போல பளபளப்பாக மாறும்.
Image credits: Freepik
Tamil
அடர்த்தியான முடி வளர்ச்சி
இந்த கலவையைக் கொண்டு மசாஜ் செய்யும்போது, ரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால்கள் (Follicles) சுறுசுறுப்பாகின்றன. இதனால் முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
Image credits: Freepik
Tamil
பயன்படுத்துவது எப்படி?
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலக்கவும். இதைத் தலையில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, பிறகு மைல்டான ஷாம்பூ கொண்டு கழுவவும்.